PF பணத்தில் மோசடி.. ரூ.1000 கோடி ஸ்வாகா.. EPFO தீவிர விசாரணை!

 தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (EPFO) மும்பை அலுவலகத்தில் நடந்த தவறினால் சுமார் 1000 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து EPFO நிறுவனம் விசாரணையை தொடங்கியுள்ளது.



மும்பை கண்டிவலி பகுதியில் உள்ள EPFO அலுவலகத்தை சேர்ந்த ஊழியர் ஒருவர், தவறான நபர்களுக்கு நிதிப் பரிமாற்றம் செய்துள்ளதாகவும், அதற்காக அவர் லஞ்சம் மற்றும் பிற சலுகைகள் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் EPFO நிறுவனத்துக்கு சுமார் 1000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து விசாரணைக்கு EPFO உத்தரவிட்டுள்ளது.


மும்பை கண்டிவலி EPFO அலுவலகத்தில் சீனியர் சோசியல் செக்யூரிட்டி அசிஸ்டண்டாக மசிந்த்ரா பம்னே என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் வைத்த சட்டவிரோதமான கிளைம்களுக்கு நிதி செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதற்காக மசிந்த்ரா பம்னே சட்டவிரோதமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களிடம் லஞ்சம் பெற்றுள்ளதாகவும் மண்டல PF ஆணையர் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளார்.


இந்த மோசடியால் EPFO நிறுவனத்துக்கு சுமார் 1000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக EPFO மத்திய அறங்காவலர் குழு உறுப்பினர் பிரபாகர் பன்சுரே தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் குறித்து காவல்துறையினர் ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் EPFO நிறுவனமும் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment